திருச்சி ரயில்வே கோட்ட மேலாளராக எம்.எஸ். அன்பழகன் பொறுப்பேற்றுக்கொண்டார்.
சென்னை, கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டம் பெற்ற அவர் 1992 ஆம் ஆண்டு ஐஆர்எஸ்எஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று ரயில்வே பணியில் சேர்ந்தார். ரயில்வே துறையில் திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் உதவி (மெட்டீரியல்) மேலாளராகவும், தொடர்ந்து முதுநிலை மேலாளர் பதவியிலும், பெங்களூர் ரயில் சக்கர தொழிற்சாலையில் முதன்மை (மெட்டீரியல்) மேலாளராகவும் பணியாற்றியுள்ளார். இந்நிலையில் திருச்சி கோட்ட ரயில்வே மேலாளராக தேர்வு செய்யப்பட்ட அவர், திருச்சி கோட்ட மேலாளர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார்.
துறை ரீதியான பயிற்சிகள் மற்றும் நிகழ்ச்சிகளுக்காக சிங்கப்பூர், மற்றும் மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் சென்று வந்துள்ளார். கோட்ட மேலாளராக பொறுப்பேற்ற அவருக்கு திருச்சி கோட்ட ரயில்வே அலுவலக அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Prev Post
Comments are closed, but trackbacks and pingbacks are open.