திருச்சி கே.கே.நகர் உடையான்பட்டி சிந்தாமணி நகரை சேர்ந்தவர் ராஜசேகர் (வயது 55). சம்பவத்தன்று இவர் வீட்டை பூட்டி விட்டு வெளியூரில் இருந்து திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்திற்கு வந்த மகளை அழைத்து வர சென்றிருந்தார். அந்த சமயத்தில் ராஜசேகர் வீட்டு பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள்
அங்கிருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த 25 பவுன் நகைகளை திருடிக் கொண்டு அங்கிருந்து ஓடிவிட்டனர். பிறகு வீட்டுக்கு வந்து பார்த்த ராஜசேகர் வீட்டில் உள்ள நகைகள் திருட்டுப் போய் இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து கேகே நகர் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து நகைகளை திருடிய மர்ம ஆசாமிகளை வலை வீசி தேடி வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.