Rock Fort Times
Online News

காஷ்மீரில் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட 26 பேருக்கு திருச்சி நீதிமன்றத்தில் மவுன அஞ்சலி…!

காஷ்மீரில் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட 26 அப்பாவி பொதுமக்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும், திருச்சி வழக்கறிஞர்
ஏ.கலியமூர்த்தி இறப்புக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாகவும் திருச்சி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பாக மௌன அஞ்சலி கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்ட நீதிபதி கிறிஸ்டோபர் மற்றும் கூடுதல் மாவட்ட நீதிபதிகள், சார்பு நீதிபதிகள், குற்றவியல் நீதித்துறை நடுவர்கள், திருச்சிராப்பள்ளி வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் எஸ்.பி.கணேசன், செயலாளர் சி.முத்துமாரி, துணைத்தலைவர் வடிவேல்சாமி, இணைச்செயலாளர் விக்னேஷ், பொருளாளர் சதீஷ் மற்றும் அனைத்து வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்