திருச்சி மேற்கு தொகுதிக்குட்பட்ட அரிஸ்டோ ரவுண்டானா அருகே, இந்தியா கூட்டணியின் சார்பில் திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் துரை வைகோவின் தலைமை தேர்தல் அலுவலகம் திறப்பு விழா இன்று நடைபெற்றது, இவ்விழாவில் திமுக முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என். நேரு,திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி அலுவலகத்தை திறந்து வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து திருச்சி பீமநகர் செடல் மாரியம்மன் கோவில் அருகே அமைச்சர் கே.என்.நேரு திருச்சி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் துரை வைகோவை அறிமுகம் செய்து வைத்து தீப்பெட்டி சின்னத்தில் வாக்கு சேகரித்தார். தொடர்ந்து மார்சிங்பேட்டை, ஒத்தக்கடை, பெரிய மிளகுபாறை,பொன்நகர் கருமண்டபம், கிராப்பட்டி, எடமலைப்பட்டிபுதூர், ஆழ்வார் தோப்பு உள்ளிட்ட பகுதிகளில் அமைச்சர் கே. என்.நேரு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இந்த பிரச்சாரத்தின் போது மேற்கு மாநகர செயலாளர் மேயர் அன்பழகன், கிழக்கு மாநகர செயலாளர் மதிவாணன், மதிமுக துணை பொதுச் செயலாளர் டாக்டர் ரொகையா, பகுதிச் செயலாளர்கள் மோகன்தாஸ்,கமால் முஸ்தபா, வட்ட செயலாளர் கிராபட்டி செல்வம் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்
Comments are closed, but trackbacks and pingbacks are open.