தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா நினைவு நாளை முன்னிட்டு திருச்சி மத்திய மாவட்ட திமுக சார்பில் திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் இருந்து அமைதி ஊர்வலம் புறப்பட்டு சிந்தாமணி அண்ணா சிலையை சென்றடைந்தது. பின்னர், மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி தலைமையில், மாநகர செயலாளரும், மேயருமான அன்பழகன் முன்னிலையில் அண்ணாவின் திருவுருவ சிலைக்கு திமுகவினர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்வில் ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி, பகுதி செயலாளர்கள் கமால் முஸ்தபா, இளங்கோ, காஜாமலை விஜி மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட கழக நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.