Rock Fort Times
Online News

வனவிலங்குகளை வேட்டையாட சென்ற போது துயரம்: மின்வேலியில் சிக்கி தந்தை- மகன் உள்பட 3 பேர் உயிரிழப்பு…!

திருப்பத்தூர் மாவட்டம், பெருமா பட்டு பகுதியை சேர்ந்தவர் சிங்காரம்(40).  இவர் 9ம் வகுப்பு படிக்கும் தனது மகன் லோகேஷ்(14) மற்றும்  கரிபிரான் (60)  ஆகியோருடன் உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கியுடன் நேற்று இரவு வனவிலங்கு வேட்டைக்காக சென்றுள்ளார்.  அப்போது  அதே பகுதியை சேர்ந்த முருகன் என்பவர் தனக்கு சொந்தமான நிலத்தில் வனவிலங்குகள் நுழைவதை தடுக்க சட்ட விரோதமாக மின்வேலி அமைத்து இருந்ததாக கூறப்படுகிறது. இதை அறியாத சிங்காரம் உள்ளிட்ட  3 பேரும் அந்த மின் வேலியை தொட்டு விட்டதாக சொல்லப்படுகிறது.  இதில், அவர்கள் மீது மின்சாரம் பாய்ந்ததில் 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இது குறித்த தகவலின் பேரில் அப்பகுதி போலீசார் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று  3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்