திருச்சியைஅடுத்த திருப்பராய்த்துறை கீழத் தெருவை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்.இவர் திருச்சி தாராநல்லூர்ரை சேர்ந்த சதீஷ்குமார் என்ற என்ஜினியரிடம் கொத்தனாராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் தனரத்தனம் நகர் பகுதியில் புதிதாக ஒரு கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. அந்த கட்டிட்த்தில் இரண்டாவது மாடியில் பாதுகாப்பு இன்றி பாலகிருஷ்ணன் கான்கிரீட் வேலை செய்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் வேலைபார்த்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக பாலகிருஷ்ணன் இரண்டாவது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் அவர் தலையில் பலத்த காயம் அடைந்து ஆபத்தான நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அங்கு சிகிச்சை பலனின்றி பாலகிருஷ்ணன் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து காந்தி மார்க்கெட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.