Rock Fort Times
Online News

நேபாளத்தில் துயர சம்பவம்: விமானம் விழுந்து தீப்பிடித்ததில் 18 பேர் பலி…!

நேபாளத்தில் 19 பேருடன் புறப்பட்ட விமானம் ஒன்று ஓடுபாதையில் இருந்து சறுக்கி, தரையில் மோதி தீப்பிடித்தது. இந்த விபத்தில் 18 பேர் உயிரிழந்தனர். ஒரு விமானி மட்டும் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார். நேபாளம் தலைநகர் காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பொக்காராவுக்கு சவுரியா ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்டது. 19 பேருடன் சென்ற இந்த விமானம், திடீரென ஓடுபாதையில் இருந்து சிறிது தூரம் பறந்ததும், கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து தீப்பிடித்து எரிந்தது. உடனே மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டன.இருந்தாலும் விமானத்தில் பயணம் செய்த 18 பேர் உயிரிழந்தனர். ஒரு விமானி மட்டும் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார். விமான விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்