திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் சிங்கப்பூர் செல்லும் ஸ்கூட் விமானத்தில் பயணம் செய்வதற்காக வந்த பயணிகள் மற்றும் அவர்களது உடைமைகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தபோது பயணி ஒருவர், வெளிநாட்டு கரன்சிகளை அதிக அளவில் வைத்திருந்தார். அதற்கான உரிய ஆவணங்கள் எதுவும் அவரிடம் இல்லை. அதன்பேரில், அந்த வெளிநாட்டு கரன்சிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
அவற்றின் இந்திய மதிப்பு ரூ.10 லட்சத்து 33 ஆயிரம் ஆகும். அந்தப் பயணியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Comments are closed.