Rock Fort Times
Online News

திருச்சியில் சிறை அதிகாரி வீட்டின் பூட்டை உடைத்து கைவரிசை காட்டிய மர்ம நபர்களுக்கு வலை…!

திருச்சி மத்திய சிறையில் தலைமை வார்டனாக இருப்பவர் திருமுருகன். இவர் திருச்சியில் உள்ள சிறை காவலர்களுக்கான குடியிருப்பில் வசித்து வருகிறார்.
சம்பவத்தன்று இரவு பூட்டப்பட்டிருந்த இவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் ரூ.1500 பணத்தை திருடினர். அப்போது அருகில் வசிக்கும் சிறை காவலர் அருண்குமார் என்பவரது மனைவி மற்றும் குழந்தைகள் மர்ம நபர்களின் சத்தம் சத்தம் கேட்டு எழுந்துள்ளனர். ஆனால், மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் கே.கே.நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்