Rock Fort Times
Online News

ஜூன் 4ல் டாஸ்மாக் பார் லீவு

வாக்கு எண்ணும் நாளான ஜூன் 4-ஆம் தேதி திருச்சி மாவட்டத்தில் உள்ள மதுபானக் கடைகள் இயங்காது என மாவட்ட ஆட்சியர் மா. பிரதீப்குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: திருச்சி மாவட்டத்தில் உள்ள சில்லறை விற்பனை மதுபான கடைகள், அதனுடன் இணைந்து இயங்கும் மதுக்கூடங்கள், எப்.எல் 2 முதல் எப்.எல் 11 முடிய உள்ள பார்கள் (எப்எல் 6 நீங்கலாக) என அனைத்து மதுபானக் கடைகளும் மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணும் நாளான ஜூன் 4- ஆம் தேதி காலை 12 மணி முதல் இரவு 10மணி வரை மூடப்பட்டிருக்கும். அன்றைய நாளில் மதுபானங்கள் விற்பனை செய்வதையும், வேறிடங்களுக்கு கொண்டு செல்வதையும் தவிர்க்க வேண்டும். மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்