Rock Fort Times
Online News

திருச்சி புனித ஜோசப் ஆங்கிலோ இந்தியன் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவிகள் சந்திப்பு கூட்டம்…

26ம் தேதி நடக்கிறது

திருச்சி மேலப்புதூர் பகுதியில் புனித ஜோசப் ஆங்கிலோ இந்தியன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. 1901-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த பள்ளியில் எல்.கே.ஜி – யூ.கே.ஜி மற்றும் ஒன்றாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். நூறு ஆண்டுகளை கடந்தும் திருச்சி மாநகரை பொறுத்தவரை இங்கு உலகத்தரமான கல்வி அளிக்கப்படுவதோடு இங்கு பயின்ற மாணவிகள் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் பல்வேறு உயர் வேலை வாய்ப்புகளை பெற்றும், தொழில் துறையிலும் மிகச் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். இந்த மேல்நிலைப் பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவிகள் அடிக்கடி சந்தித்து தங்களது மலரும் நினைவுகளை பகிர்ந்து கொள்வது வழக்கம். அந்தவகையில் இந்த பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவிகள் சந்திப்பு கூட்டம் வருகிற 26ம் தேதி ( வெள்ளிக்கிழமை) காலை 9 மணிக்கு பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ளது. இதில் முன்னாள் மாணவிகள் நீல நிற உடை அணிந்து வந்து ₹ 300 நுழைவு கட்டணம் செலுத்தி பங்கேற்று மலரும் நினைவுகளை பகிர்ந்து கொள்வதோடு அன்று நடைபெறும் மதிய விருந்திலும், விளையாட்டு போட்டிகளிலும் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும், விவரங்களுக்கு 99523 78619 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை ஜோசா உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்

Error 403 The request cannot be completed because you have exceeded your quota. : quotaExceeded

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்