Rock Fort Times
Online News

லால்குடி பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு- காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்…!

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள குமுளூர் ஊராட்சி மேட்டு தச்சங்குறிச்சி பகுதி மக்களுக்கு கடந்த ஒரு மாத காலமாக சரிவர குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று தெரிகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.இதனால், விரக்தி அடைந்த அப்பகுதி மக்கள் குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்கக் கோரி இன்று(08-04-2024) திருச்சி-புள்ளம்பாடி சாலையில் காலி குடங்களுடன் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் காணிக்கிளிய நல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். குடிநீர் வழங்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதையடுத்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்