விழுப்புரம் மாவட்டம் ரெட்டணை கூட்டேரி பட்டில் தனியார் சிபிஎஸ்இ பள்ளி உள்ளது. இங்கு 700 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள்.
இப்பள்ளியின் முதல்வராக கார்த்திகேயன் இருந்து வருகிறார். இவர், பள்ளி மாணவிகளை தனது அறைக்கு அழைத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து, அந்த மாணவிகள் தங்களது பெற்றோர்களிடம் தெரிவித்தனர். இது தொடர்பாக, பெரிய தச்சூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால், போலீசார் வழக்கு பதிவு செய்யாமல் காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால், விரக்தி அடைந்த மாணவிகளின் பெற்றோர்கள் விழுப்புரம் மகளிர் போலீசில் புகார் அளித்தனர். அந்த புகார்களின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி தனியார் பள்ளி முதல்வர் கார்த்திகேயன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.