Rock Fort Times
Online News

தேசிய புத்தாக்க பயிற்சிக்கு தேர்வு – திருச்சி,கேம்பியன் பள்ளி மாணவர்கள் சாதனை!

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள் – மாணவர்களுக்கான புத்தாக்க மேம்பாட்டு திட்டமானது செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி திருச்சி கேம்பியன் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் அருட்சகோதரர் ஜேம்ஸ் பால்ராஜ் தலைமையின் கீழ், ஆசிரியர்கள் வாசிங்டன் மற்றும் மரிய சூசைராஜன் ஆகியோர் இக்குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்டு மாவட்ட அளவிலான புத்தாக்க பயிற்சியில் பங்கேற்றனர். மேலும் ஆசிரியர்களின் வழிகாட்டுதரின்படி கேம்பியன் பள்ளி மாணவர்களும் பல்வேறு குழுக்களாக பங்கேற்று தங்களது திறமைகளையும் புதிய கண்டுபிடிப்புகளையும் காட்டினர். இதையடுத்து, மாநில அளவிலான புத்தாக்க பயிற்சிக்கு கேம்பியன் பள்ளியின் மூன்று குழுக்கள் தேர்வானது. இதில் பங்கேற்று சிறப்பாக செயல்பட்ட டெஃபி ஆல்பினா ஷைனி, ஆஃபரின் பர்ஹானா, சிந்தியா ரிஷிகா, சரண்யா மற்றும் ஹீனா பர்வீன் ஆகியோர் இந்திய அளவில் நடைபெறும் புத்தாக்க திட்டத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து மேம்பியன் பள்ளி முதல்வர் அருட்சகோதரர் ஜேம்ஸ் பால்ராஜ், தேர்தெடுக்கப்பட்ட மாணவிகளையும், ஆசிரியர்களையும் பாராட்டி வெற்றி பெற வாழ்த்தினார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்