Rock Fort Times
Online News

தி.மு.க. பிரமுகரிடம் ரூ.2 லட்சம் திருட்டு….

திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் ஊராட்சிக்கு ஒன்றியத்திற்குட்பட்ட சிறுநாவலூர் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 45). இவர் உப்பிலியபுரம் தெற்கு தி.மு.க. ஒன்றிய துணைச் செயலாளராக உள்ளார். இவர், துறையூர் – திருச்சி சாலையில் உள்ள தனியார் வங்கியில் தனது கணக்கிலிருந்து ரூ. 2 லட்சத்தை எடுத்து, இருசக்கர வாகனத்தின் பின்பகுதியில் வைத்துக்கொண்டு சென்றதாக கூறப்படுகிறது. நீதிமன்றம் எதிரே உள்ள கடையின் முன்பு இரு சக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு நண்பர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர் ஒருவர் இருசக்கர வாகனத்தின் பின்பகுதியில் வைக்கப்பட்டிருந்த ரூ.2 லட்சத்தை திருடி சென்றுவிட்டார். இதுகுறித்து துறையூர் போலீஸில் சுப்பிரமணியன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 2 மர்ம  நபா்களை  வலைவீசி தேடி வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்