Rock Fort Times
Online News

திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறைக் கைதி உயிரிழந்தார்…!

அரியலுார் மாவட்டம், மீன்சுருட்டி மேல தெருவைச் சேர்ந்தவர் கருணாகரன் (வயது54). இவர் கொலை வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிறுநீரகக் கோளாறால் பாதிக்கப்பட்ட அவர், திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்தார். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் இன்று(11-12-2024) உயிரிழந்தார். இதுகுறித்து திருச்சி மத்திய சிறை அதிகாரி ஷர்மிளா அளித்த புகாரின் பேரில், திருச்சி அரசு மருத்துவமனை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Error 403 The request cannot be completed because you have exceeded your quota. : quotaExceeded

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்