திருச்சி, தெப்பக்குளம், வாணப்பட்டரை தெருவில் அமைந்துள்ள மாரியம்மன் கோவில் தேரோட்டம் நாளை( 22.04.2025) செவ்வாய்கிழமை நடைபெறுகிறது. இதன் காரணமாக தேர் செல்லும் வீதிகளான வாணப்பட்டரை தெரு, வடக்கு ஆண்டார் வீதி, கீழ ஆண்டார் வீதி, சின்னகடை வீதி, என்.எஸ்.பி.ரோடு, தெப்பக்குளம் ஆகிய பகுதிகளில் பாதுகாப்பு கருதி அன்றைய தினம் மின் நிறுத்தம் செய்யப்படும் என்று மின்வாரிய செயற்பொறியாளர் கா.முத்துராமன் தெரிவித்துள்ளார்.
Comments are closed.