Rock Fort Times
Online News

திருச்சி, சிறுகாம்பூர் பகுதியில் நாளை மின்தடை…!

திருச்சி வேங்கை மண்டலம் துணை மின் நிலையத்தில் நாளை (26.07.2024) வெள்ளிக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதன் காரணமாக நாளை காலை 9-45 மணி முதல் மாலை 4 மணி வரை சிறுகாம்பூர் பிரிவு அலுவலகத்துக் குட்பட்ட மூவானூர், வேங்கை மண்டலம், தண்ணீர்பந்தல், மேலக்கண்ணுக்  குளம், கீழக்கண்ணுக்குளம், பார்வதிபுரம்,  குருவம்பட்டி, கல்லூர், வேப்பந்துறை, சோழங்கநல்லூர், செந்தாமரைக்கண், சிறுகாம்பூர், நெ.2 கரியமாணிக்கம், சென்னகரை, ராமகிரிப்பட்டி, செங்குடி, வாழ்மால்பாளையம், செட்டிமங்கலம், நெய்வேலி, கிளியநல்லூர், வாத்தலை,  வி.மணியம்பட்டி, சிலையாத்தி, துடையூர், பாண்டியபுரம், சுனைப்புகநல்லூர், ஈச்சம்பட்டி ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது.  இதேபோல  மண்ணச்சநல்லூர் மேற்கு மற்றும் டவுன் ஆகிய பிரிவு அலுவலகங்களுக்குட்பட்ட இடங்களான மூவராயம்பாளையம், கவுண்டம்பட்டி, குருவிக்காரன்குளம், காட்டுக்குளம், தீராம்பாளையம், தில்லாம்பட்டி, பழையூர், செங்குழிப்பட்டி, உடையாம்பட்டி, திருப்பைஞ்சீலி, திருவரங்கப்பட்டி, பெரமங்கலம், சத்திரப்பட்டி, காளவாய்பட்டி, பூனாம்பாளையம், திருவெள்ளறை, ராசாம்பாளையம், சாலக்காடு,  புலிவலம் பிரிவு அலுவலகத்துக்குட்பட்ட இடங்களான புலிவலம், மண்பாறை, சந்தனப்பட்டி, டி.புதுப்பட்டி, பழம்புதூர், திருத்தலையூர், நல்லயம்பட்டி ஆகிய இடங்களில் மின் வினியோகம் இருக்காது என்று தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழகம் திருச்சி இயக்கலும் காத்தலும் செயற்பொறியாளர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்