தமிழ்நாட்டுக்குரிய தண்ணீரை தர மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்து நாளை ( 11.10.2023 ) டெல்டா மாவட்டங்களில் கடை அடைப்பு போராட்டம் மற்றும் மறியல் போராட்டம் காவிரிபடுகை பாதுகாப்பு கூட்டியக்கம் மற்றும் திமுக, அதன் கூட்டணி கட்சிகள் சார்பாக நடக்கிறது. அதேபோல, திருச்சியிலும் கடை அடைப்பு போராட்டம் மற்றும் தலைமை தபால் நிலையம் முன்பு மறியல் போராட்டம் நடத்தப்படுகிறது. இதற்கு ஆதரவு கோரி காந்தி மார்க்கெட் வியாபாரிகள் மற்றும் அந்த பகுதியில் உள்ள வியாபாரிகளிடம் திருச்சி கிழக்கு மாநகர திமுக செயலாளர் மு.மதிவாணன், திருச்சி மாநகர் மாவட்ட மதிமுக செயலாளர் வெல்லமண்டி சோமு, மனிதநேய மக்கள் கட்சி திருச்சி கிழக்கு மாவட்ட செயலாளர் அஷ்ரப் அலி, கம்யூனிஸ்ட் கட்சி திருச்சி மாவட்ட செயலாளர் ராஜா, விசிக கிழக்கு மாநகர் மாவட்ட செயலாளர் கனியமுதன் மற்றும் கட்சி நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள் துண்டு பிரசுரம் வழங்கி ஆதரவு திரட்டினர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.