Rock Fort Times
Online News

திருச்சியில் வட மாநில சகோதரர்களுக்கு  கத்திக்குத்து…

ஒருவர் கைது- தப்பி ஓடியவருக்கு வலைவீச்சு...

பீகார் மாநிலம் சேபுரா மாவட்டம் பதேபூர் பகுதியைச் சேர்ந்தவர் பப்பு குமார் (வயது 33). இவரது சகோதரர் பப்லு (33). இவர்கள் இருவரும் திருச்சி சங்கிலியாண்டபுரம் அண்ணா நகர் ரோடு பகுதியில் உள்ள ஒரு சோப்பு கம்பெனியில் வேலை பார்த்து வருகின்றனர். இதே கம்பெனியில் சங்கிலியாண்டபுரம் ராமமூர்த்தி நகர் பகுதியைச் சேர்ந்த பரணிதரன் (26), இவரது மனைவி தாமரைச்செல்வியும் பணியாற்றி வருகின்றனர். இந்த கம்பெனியில் மேற்பார்வையாளராக பணியாற்றும் பப்புகுமார், தாமரைச்செல்வியிடம் வேலை விஷயமாக பேசுவது வழக்கம். இது பரணிதரனுக்கு பிடிக்கவில்லை. அதைத்தொடர்ந்து பரணிதரன் தனது நண்பர் பாண்டியராஜன் என்பவருடன் ஒரு டீக்கடையில் நின்று கொண்டு பப்புகுமாரை அங்கு அழைத்து தனது மனைவியுடன் பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் எனக் கூறி , அவரை தாக்கியதுடன் கத்தியால் குத்தி உள்ளனர். இதை அறிந்த அவரது சகோதரர் பப்லு அங்கு சென்றார். பின்னர் அவரையும் பரணிதரன் மற்றும் அவரது நண்பரும் அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பப்புகுமார் பாலக்கரை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பாண்டியராஜனை கைது செய்தனர். தப்பி ஓடிய பரணிதரனை தேடி வருகின்றனர். வட மாநில சகோதரர்கள் தாக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்