திருச்சி தில்லைநகர் 9-வது கிராஸ் செங்குளத்தான் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 53). பந்தல் அமைக்கும் தொழிலாளி. சம்பவத்தன்று இவர் சக தொழிலாளியுடன் திருச்சி பெரிய மிளகுபாறை பொன் நகர் பகுதியில் பந்தல் அமைக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக
செல்வராஜ் உயரமான இடத்திலிருந்து சாக்கடையில் தவறி விழுந்தார். இதில், படுகாயம் அடைந்த செல்வராஜ் ஆபத்தான நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து செசன்ஸ் கோர்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed.