திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பிச்சாண்டார் கோவில் ஊராட்சியில், அப்பகுதியைச் சேர்ந்த தொழிலாளர்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பயனடைந்து வந்தனர். இந்நிலையில் கடந்த 1 வாரமாக ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் வேலை வழங்கப்படாமலும், ஏற்கனவே 75 நாட்களாக செய்யப்பட்ட வேலைக்கு அதற்கான தொகை பட்டுவாடா செய்யப்படாமலும் இருந்ததாக கூறப்படுகிறது. இதனை கண்டித்தும், வேலை மற்றும் சம்பள பாக்கி வழங்கக் கோரியும் பிச்சாண்டார் கோவில் கிராம 100 நாள் திட்ட தொழிலாளர்கள் மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்க நிர்வாகிகள் 500க்கும் மேற்பட்டோர் மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து மண்ணச்சநல்லூர் போலீசார் மற்றும் ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பணி வழங்கப்படும் எனவும், சம்பள பணம் இந்த வாரத்தில் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.