திருச்சி மாவட்டம் லால்குடி அருகில் புள்ளம்பாடி ஒன்றியத்தில் உள்ள காணக்கிளியநல்லூரில் புதிதாக போலீஸ் நிலையம் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார் . அதன்படி காணக்கிளியநல்லூரில் போலீஸ் நிலையம் கட்டப்பட்டது. இதனை தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு ஐபிஎஸ் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து காணக்கிளியநல்லூரில் புதிதாக அமைக்கப்பட்ட போலீஸ் நிலையத்தின் கல்வெட்டுகளை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றினார்.
தொடர்ந்து போலீஸ் நிலைய வளாகத்தை மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமார் ஐஏஎஸ், ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் திருச்சி மண்டல காவல்துறை தலைவர் கார்த்திகேயன், திருச்சி சரக காவல்துறை துணை தலைவர் சரவணன் சுந்தர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார், லால்குடி டி.எஸ்.பி.அஜய் தங்கம், எம்.எல்.ஏ .சௌந்தர பாண்டியன் மற்றும் அரசு அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.