திருச்சி கே.கே.நகர் அம்மன் நகர் பாலமுருகன் தெருவை சேர்ந்தவர் நரசிம்மன் (வயது 71 ).சம்பவத்தன்று இவரது செல்போன் எண்ணுக்கு ஒரு மர்ம ஆசாமி தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது அவர், ஷேர் மார்க்கெட்டில் நீங்கள் முதலீடு செய்தால் இரட்டிப்பாக பணம் கிடைக்கும் என்று ஆசைவார்த்தை கூறியுள்ளார். இதனை நம்பிய நரசிம்மன் தனது வங்கி கணக்கில் இருந்த ரூ.40 லட்சத்து 45 ஆயிரத்தை அந்த மர்ம நபர் கொடுத்த எண்ணில் செலுத்தி உள்ளார். பிறகு நரசிம்மன் அந்த நம்பருக்கு பலமுறை தொடர்பு கொண்டபோது தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த நரசிம்மன் இதுகுறித்து திருச்சி சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து முதியவரிடம் ஆன்லைன் மூலம்
ரூ.40 லட்சத்து 45 ஆயிரத்தை சுருட்டிய மர்ம ஆசாமியை வலைவீசி தேடி வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.