Rock Fort Times
Online News

திருச்சி மாநகர பகுதியில் 19-ந் தேதி மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள் அறிவிப்பு..

.

திருச்சிதென்னூா் துணை மின்நிலையத்தில் வருகிற 19ம் தேதி( செவ்வாய்க்கிழமை) பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
இதன் காரணமாக இங்கிருந்து மின் விநியோகம் பெறும் தில்லை நகா் கிழக்கு, மேற்கு விஸ்தரிப்பின் அனைத்துப் பகுதிகள், காந்திபுரம், அண்ணாமலை நகா், கரூா் புறவழிச்சாலை, தேவா் காலனி, தென்னூா் ஹை ரோடு, அண்ணா நகா் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகள், புதுமாரியம்மன் கோயில் தெரு, சாஸ்திரி சாலை, ரஹ்மானியபுரம், சேஷபுரம், ராமராயா் அக்ரஹாரம், வடவூா், விநாயகபுரம், வாமடம், ஜீவா நகா், மதுரை சாலை, கல்யாணசுந்தரபுரம், நத்தா்ஷா பள்ளிவாசல், பழைய குட்ஷெட் சாலை, மேலரண் சாலை, ஜாபா் ஷா தெரு, பெரிய கடைவீதி, சூப்பா் பஜாா், சிங்காரத்தோப்பு, பாபு சாலை, மதுரம் மைதானம், சுண்ணாம்புக்காரத் தெரு, சந்துக்கடை, கள்ளத்தெரு, அல்லிமால் தெரு, பெரிய செட்டித் தெரு, சின்னசெட்டித் தெரு, பெரியகம்மாளத் தெரு, சின்னகம்மாளத் தெரு, மரக்கடை, வெல்லமண்டி, காந்தி சந்தை, தஞ்சை சாலை, கல்மந்தை, கூனிபஜாா் ஆகிய பகுதிகளில் அன்று காலை 9-45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது.இதேபோல,வரகனேரி துணை மின்நிலையத்தில் 19- ம் தேதி பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் மகாலட்சுமி நகா், தனரெத்தினம் நகா், வெல்டா்ஸ் நகா், தாராநல்லூா்,ஏ.பி. நகா், விஸ்வாஸ் நகா், பூக்கொல்லை உள்ளிட்ட பகுதிகளில் அன்று காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது என மின்வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்