திருச்சி மாவட்டம், தொட்டியத்தில் மதுரை காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற இக்கோவிலில் பங்குனி மாதம் திருத்தேர் உற்சவ விழா ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். இந்த திருவிழாவின்போது இரண்டு மிகப்பெரிய தேர்களை பக்தர்கள் தோளிலும், தலையிலும் சுமந்து கொண்டு வீதி உலா வருவர். மதுரை காளியம்மன் தினமும் மஞ்சள் காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.சம்பவத்தன்று கோவிலுக்கு குழந்தையுடன் காரில் வந்த ஒரு தம்பதி, பூசாரி பொங்கல் வைக்க சென்றிருந்த நேரத்தில் அம்மன் கழுத்தில் இருந்த 15 பவுன் தங்கத் தாலியை நைசாக திருடிக் கொண்டு காரில் ஏறி வேகமாக சென்று விட்டனர்.இதுகுறித்த புகாரின் பேரில், தொட்டியம்போலீசார் கோவிலுக்கு வந்து அங்குள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்ததில் ஒரு தம்பதி குழந்தையுடன் நீண்ட நேரம் கோவிலில் அமர்ந்திருந்ததும், அவர்கள் அம்மன் தாலியைதிருடிவிட்டு காரில் ஏறி செல்வதும் பதிவாகி இருந்தது. அந்தக் காட்சிகளின் அடிப்படையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட தம்பதியை போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.இந்தநிலையில்,நேற்று தொட்டியம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்தையன் தலைமையிலான போலீசார் காட்டுப்புத்தூர் அருகே உள்ள மாயனூர் காவிரி தடுப்பணை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது காரில் வந்த தம்பதியை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர்கள் தொட்டியம் மதுரை காளியம்மன் கோவிலில் அம்மன் கழுத்தில் கிடந்த தங்கத் தாலியை திருடியவர்கள் என்பது தெரிய வந்தது.மேலும், அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில்அவர்கள் கரூர் மாவட்டம் திருக்காம்பு புலியூரை சேர்ந்த சிவசுப்பிரமணியன் (வயது 34),அவரது மனைவி நித்யா (27) என தெரியவந்தது.இவர்கள் மீது 16-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் உள்ளன.
கோவில்களில் திருடுவதையே இவர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.தொட்டியம் மதுரை காளியம்மன் கோவிலுக்கு 5 முறைக்கு மேல் வந்து கோவிலை நோட்டமிட்டு சென்றுள்ளனர்.அதன்பின்னர்,காரில் கை குழந்தையுடன் வந்து இந்த துணிகர சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
அதன்பேரில் போலீசார் இருவரையும் கைது செய்தனர் .மேலும் அவர்கள் அம்மன் தாலியை உருக்கி கட்டியாக வைத்திருந்தனர், அதனையும் போலீசார் பறிமுதல் செய்தனர். திருடுவதற்கு பயன்படுத்திய காரும் கைப்பற்றப்பட்டது.
Now Playing
Now Playing
Now Playing
Now Playing
Now Playing
Now Playing
1
of 973
Comments are closed, but trackbacks and pingbacks are open.