Rock Fort Times
Online News

திருச்சியில் பரிதாபம்: திருமணமான 3 மாதத்தில் புது மாப்பிள்ளை தற்கொலை..

திருச்சி பாலக்கரை சங்கிலியாண்டபுரம் காந்தி தெரு பகுதியைச் சேர்ந்தவர் மரிய சூசைராஜ் (வயது 34) இவருக்கும், அபிலாஜோன்ஸ் (24) என்பவருக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. மரியசூசை ராஜுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் புதுமண தம்பதியினர் இடையே பிரச்சனை ஏற்பட்டது. இதன் காரணமாக கடந்த 1ம் தேதி கணவரிடம் கோபித்துக் கொண்டு தாய் வீட்டுக்கு அபிலா ஜோன்ஸ் சென்று விட்டார். பின்னர் கடந்த 21-ம் தேதி கணவர் வீட்டுக்கு வந்த அபிலா ஜோன்சுக்கும், மரிய சூசைராஜுக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மரிய சூசைராஜ் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் பாலக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Error 403 The request cannot be completed because you have exceeded your quota. : quotaExceeded

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்