திருச்சியில் அதிமுக ஜெ.பேரவை சார்பில் திண்ணை பிரச்சாரம்- சாதனை விளக்க துண்டு பிரசுரங்களை மாநகர் மாவட்ட செயலாளர் ஜெ.சீனிவாசன் வழங்கினார்…!
திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக ஜெயலலிதா பேரவை சார்பில் மாவட்ட ஜெ. பேரவை செயலாளரும், முன்னாள் ஆவின் தலைவருமான கார்த்திகேயன் ஏற்பாட்டில், என்.எஸ்.பி ரோடு அருகே, அதிமுக ஆட்சியில் நடைபெற்ற சாதனைகளை எடுத்துக் கூறும் விதமாக துண்டு பிரசுரங்கள் விநியோகித்து திண்ணை பிரச்சாரம் நடைபெற்றது. திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் துணை மேயருமான ஜெ.சீனிவாசன் அ.தி.மு.க ஆட்சியில் நடைபெற்ற சாதனைகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு விநியோகித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இந்நிகழ்வில் கழக அமைப்பு செயலாளர் ரத்தினவேல், ஜெ. பேரவை துணைச் செயலாளர் அரவிந்தன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். முன்னதாக மலைக்கோட்டை மாணிக்க விநாயகர் கோயிலில் சாமி தரிசனம் செய்த பிறகு என்.எஸ்.பி ரோடு, தெப்பக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்தனர்.
நிகழ்ச்சியில் ஜெயலலிதா பேரவை மாநில துணைச் செயலாளர் ஜோதிவாணன், மாவட்ட துணை செயலாளர் வனிதா, மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளர் முத்து குமார், மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் என்ஜினியர் இப்ராம்ஷா, மாநகராட்சி மண்டல குழு தலைவரும், மீனவரணி மாவட்ட செயலாளருமான கோ.கு. அம்பிகாபதி, அணிச் செயலாளர்கள் இளைஞர் அணி ரஜினிகாந்த், இலக்கிய அணி பாலாஜி, பாசறை லோகநாதன், ஐ.டி. பிரிவு வெங்கட் பிரபு, தொழிற்சங்கம் ராஜேந்திரன், ஜான் எட்வர்டு, அப்பாஸ், சகாபுதீன், இளைஞர் அணி இணைச் செயலாளர் சில்வர் சதீஷ்குமார், கலைப்பிரிவு பொருளாளர் உறையூர் சாதிக் அலி, ஜெயலலிதா பேரவை தலைவர் எனர்ஜி அப்துல் ரகுமான், பகுதி கழகச் செயலாளர்கள் அன்பழகன், என்.எஸ்.பூபதி, ஏர்போர்ட் விஜி, புத்தூர் ராஜேந்திரன், ரோஜர், வாசுதேவன், நிர்வாகிகள் சுரேஷ் குப்தா, இலியாஸ், வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் வக்கீல்கள் முல்லை சுரேஷ், முத்துமாரி, சசிகுமார், ஜெயராமன், சுரேஷ், தினேஷ்பாபு, நிர்வாகிகள் பேராசிரியர் தமிழரசன், இன்ஜினியர் ரமேஷ், நாட்ஸ் சொக்கலிங்கம், எடத்தெரு பாபு, ராஜ்மோகன், ஜெகதீசன், கதிர்வேல், ரமணி லால், ஜெ.பேரவை கோழிக்கடை பாலு, ராமலிங்கம், ஜெயக்குமார், டைமன் தாமோதரன், ஐடி நாகராஜ், தென்னூர் ஷாஜகான், உறந்தை மணிமொழியன், உடையான்பட்டி செல்வம், கே.டி. அன்புரோஸ், கே.டி ஏ. ஆனந்தராஜ், ஆரி, செபா, அப்பாகுட்டி, குமார், பொன். அகிலாண்டம், தர்கா காஜா, கே.பி. ராமநாதன், ஒத்தக்கடை மகேந்திரன், மணிகண்டன், சரவணன், கண்ணன், செல்லப்பன்,
என்.டி.மலையப்பன், காசிப்பாளையம் சுரேஷ்குமார், ஈஸ்வரன், கல்லுக்குழி முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Comments are closed.