திருச்சி, திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் உடனுறை அகி லாண்டேசுவரி கோவிலில் இன்று(15-02-2025) சனிக்கிழமை மாலை 5 மணி முதல் நாளை ஞாயிற்றுக்கிழமை (பிப்.16) பிற்பகல் 12.30 மணி வரை மூலவர் தரிசனம் கிடையாது என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவிலில் சுவாமி சந்நிதியின் பிரதான கொடிமரம் மற்றும் எண் திசைக்கொடி மரங்கள் (எட்டு திக்கு கொடி மரம்) கவசம் பொருத்துதல் மற்றும் சம்ரோசஷ்ணம் நடைபெற இருப்பதாலும், அம்பாள் அகிலாண்டேசுவரிக்கு பொன் தாடங்க பிரதிஷ்டை நிகழ்வு நடைபெற உள்ளதால் சனிக்கிழமை மாலை 5 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12.30 மணி வரை சுவாமி தரிசனம் கிடையாது என தெரிவிக்கப் பட்டுள்ளது.
Comments are closed.