திருச்சி மாநகராட்சி சீர்மிகு நகரம் திட்டத்தின்கீழ், பொதுமக்களுக்கு போதிய அழுத்தத்துடன் சீரான அளவில் 24 மணி நேரமும் குடிநீர் வழங்கும் வகையிலும், எதிர்வரும் காலங்களில் ஏற்படும் மக்கள் தொகை பெருக்கத்தை கணக்கில் கொண்டு கூடுதலாக குடிநீர் பெறும் வகையிலும் ரூ.52.17 கோடி மதிப்பீட்டில் பெரியார் நகர், கம்பரசம்பேட்டை நீர்சேகரிப்பு கிணறுகளை புனரமைத்தல் மற்றும் புதிதாக 20 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட முதன்மை சமநிலை நீர்தேக்க தொட்டி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதேபோன்று, காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் பயன்பெறும் புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள 5 நகராட்சிகள், 11 பேரூராட்சிகள் மற்றும் 3,163 ஊரக குடியிருப்புகளுக்கு நாளொன்றுக்கு 100.00 மில்லியன் லிட்டர் (2036-ம் ஆண்டு) குடிநீர் வழங்க சுமார் ரூ.616 கோடி மதிப்பில் 19.76 லட்சம் மக்கள் பயன்பெறும் வகையில் செயல்படுத்தப்பட்டு வரும் குடிநீர் திட்ட பணிகளை அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
முன்னதாக திருச்சி மாநகராட்சி சங்கிலியாண்டபுரம் பகுதியில் நடைபெற்று வரும் கழிவுநீர் குழாய் சீரமைக்கும் பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார், மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், முசிறி சட்டமன்ற உறுப்பினர் தியாகராஜன், நகரப் பொறியாளர் சிவபாதம், மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.