அரியலூரில் இருந்து சுந்தரேசபுரம், தா. பலூர் வழியாக தஞ்சை மாவட்டம் கும்பகோணத்திற்கு அரசு பேருந்து ஒன்று 30 பயணிகளுடன் இன்று(8-10-2023) சென்று கொண்டிருந்தது. பேருந்து சுந்தரேசபுரம் கிராம வளைவில் திரும்பிய போது சிமெண்ட் ஆலைக்கு நிலக்கரி ஏற்றிக்கொண்டு எதிரே வந்த லாரியுடன் மோதி விபத்துக்குள்ளானது.அப்போது பேருந்து சாலையை விட்டு கீழே இறங்கி அங்கிருந்த ட்ரான்ஸ்பார்மரில் மோதி நின்றது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த அரியலூர் மாவட்டம் கூலாட்டுகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த துரைசாமி (வயது 56), அரியலூர் மேலத்தெருவை சேர்ந்த சுரேஷ் மனைவி பாக்கியம் (23), மங்கையர்கரசி( 40), சூர்யா (40), தனம்( 55) உட்பட 10 பேர் காயமடைந்தனர். உடனடியாக அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பஸ் மோதிய வேகத்தில் டிரான்ஸ்பார்மர் வெடித்திருந்தால் விபரீத விளைவுகள் ஏற்பட்டிருக்கும். இந்த விபத்தில் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த விபத்து குறித்து விக்கிரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.