Rock Fort Times
Online News

அமைச்சர் செஞ்சி மஸ்தானுக்கு திமுகவில் மீண்டும் பொறுப்பு…!

தமிழ்நாடு சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் வெளிநாட்டு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சராக பதவி வகித்து வருபவர் செஞ்சி மஸ்தான். சமீபத்தில் திமுகவின் விழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார். அவருக்கு பதிலாக டாக்டர் ப.சேகர் நியமனம் செய்யப்பட்டார்.
மேலும், விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்த புகழேந்தி காலமானதை தொடர்ந்து அமைச்சர் பொன்முடியின் மகனான கௌதம் சிகாமணி தெற்கு மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். மேலும், விக்கிவாண்டி இடைத்தேர்தல் ஜூலை 10-ம் தேதி நடைபெற உள்ளதையடுத்து திமுக சார்பில் தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டது. இக்குழுவில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் பெயர் இடம்பெறவில்லை. இதன் காரணமாக அவர், திமுகவில் இருந்து ஓரம் கட்டப்படுவதாக அரசியல் வட்டாரத்தில் பேச்சு எழுந்தது. இந்தநிலையில், விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக அவைத் தலைவராக செஞ்சி மஸ்தானை நியமனம் செய்து துரைமுருகன் அறிவித்துள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்