திருச்சி பாராளுமன்ற தொகுதி மதிமுக வேட்பாளர் துரை வைகோவை ஆதரித்து திருச்சி தெற்கு மாவட்டம், கிழக்கு மாநகர பகுதிகளில் கிழக்கு மாநகர செயலாளர் மு.மதிவாணன், கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் தலைமையில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பிரச்சாரம் மேற்கொண்டார். திருச்சி பாலக்கரை ரவுண்டானா, ஜெயில் பேட்டை, குப்பாங்குளம் மேம்பாலம், சூசையப்பர் கோவில் பகுதி, உப்புபாறை, முஸ்லீம் தெரு, சகாயமாதா கோவில் பகுதி, வி.எம்.பேட்டை வளைவு, பஜனை கூடத்தெரு, தர்மநாதபுரம், மல்லிகைபுரம் மெயின் ரோடு, துரைசாமிபுரம், தனமணி காலனி, கோவிந்த கோனார் தெரு, சங்கிலியாண்டபுரம் மெயின் ரோடு அரசமரம், கீழப்புதூர் காளியம்மன் கோவில், எடத்தெரு விறகு மந்தை, ரெங்கசாமி பூங்கா, புதுத்தெரு, சபரி ஆஸ்பத்திரி சந்து, மோட்சராக்கினி கோவில் பகுதி, கெம்ஸ்டவுன், செங்குளம் காலனி, உடையான்தோட்டம், பருப்புகாரத்தெரு, எடத்தெரு, அண்ணாசிலை ஆகிய பகுதிகளில் துரை. வைகோவை ஆதரித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில், மகளிர் உரிமைச் தொகை வழங்கும் திட்டம், உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு புதுமைப் பெண்கள் திட்டம், இலவச பேருந்து பயணம் என பல்வேறு திட்டங்களை தந்த நமது முதல்வரின் கரத்தை வலுப்படுத்தவும், வர இருக்கின்ற பாராளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணியை வெற்றி பெறச் செய்யுங்கள். துரை. வைகோவுக்கு தீப்பெட்டி சின்னத்தில் வாக்களித்து அவரை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டுகிறேன் என்றார். பிரச்சாரத்தின்போது திருச்சி மாநகராட்சி துணை மேயர் திவ்யா தனக்கோடி, கோட்டத் தலைவர் ஜெய நிர்மலா, பகுதி செயலாளர் ராஜ் முகமது, வட்டக் கழக செயலாளர்கள் சேகர், நலங்கிள்ளி, சுரேஷ், தனுஸ்கோடி, சில்வியா, கருணாநிதி, கோவிந்தராஜ், எடிட்டன், ஞனசேகர், சீனிவாசன் மற்றும்
மதிமுக துணைப் பொதுச்செயலாளர் மருத்துவர் ரொஹையா, திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளர் வெல்லமண்டி சோமு, மாநில மாணவர் அணிச் செயலாளர் பால.சசிகுமார், மாநில தொண்டர் அணி ஆலோசகர் ஆ.பாஸ்கரசேதுபதி, மாநில ஆபத்து உதவிகள் அணிச் செயலாளர் ரமேஷ் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டு ஆதரவு திரட்டினர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.