Rock Fort Times
Online News

காதலிப்பது போல் பேசி ரூ.47 லட்சம் மோசடி செய்த திருமணமான பெண் கைது…

திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியை சேர்ந்தவர் முகமது ரியாஸ் (27). இவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சமூக வலை தளத்தில் , புதுச்சேரியைச் சேர்ந்த பெண் ஒருவாிடம் பேசி பழகியுள்ளாா். இது நாளடைவில் காதலாக மாறியுள்ளது. பின்னர் சில நாட்களில் அந்த பெண் பல தவணைகளில், இணைய வழியில் ரூ.47 லட்சம் வரை முகமது ரியாஸ்சிடம் பெற்றுள்ளார். இதனைத் தொடர்ந்து, அந்த பெண்ணை நேரடியாக சென்று முகமது ரியாஸ் பார்த்தபோது அவர் திருமணமாகி, 19 வயதில் ஒரு மகன் இருப்பதும் தன்னை ஏமாற்றியதும் தெரிய வந்தது. அதிர்ச்சியடைந்த ரியாஸ், கொடுத்த பணத்தை திருப்பி கேட்டுள்ளார். ஆனால், அதற்கு அந்தப் பெண், பணத்தை திருப்பி தர முடியாது எனக்கூறி மிரட்டியுள்ளார். இது குறித்து முகமது ரியாஸ், திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ.வருண்குமாா் ஐஏஎஸ்சிடம் புகார் அளித்தாா். அவர் அறிவுறுத்தலின் பேரில், மாவட்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் லதா தலைமையிலான போலீசார் வழக்குப் பதிந்து, இளம் பெண் போல பேசி, பணத்தை மோசடி செய்த ஜீனாபானு ( 38 ) என்பவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அந்த பெண் இதேபோல புதுச்சேரியை சேர்ந்த ஒருவரிடமும் பல லட்சங்கள் மோசடி செய்துள்ளாா் என்பது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்