Rock Fort Times
Online News

போலீஸ்காரர் துாக்கிட்டு தற்கொலை…

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகே ரிசர்வ்லைன் இந்திராநகரைச் சேர்ந்தவர் பாஸ்கரன் 63. இவரது மூத்த மகன் சிவகாசி தீயணைப்புத் துறையில் பணிபுரிந்து வருகிறார்.இளைய மகன் வைரமுத்து 2022ல் தமிழக காவல்துறையில் 2ம் நிலை போலீசாக தேர்வாகி ராஜபாளையம் 11வது பட்டாலியனில் பணிபுரிந்து வந்தார். இவருக்கு திருமணம் செய்ய பெண் பார்த்து நிச்சயதார்த்தம் நடத்த குடும்பத்தினர் திட்டமிட்டு இருந்தனர்.இந்நிலையில் ஈரோட்டை சேர்ந்த ஒரு பெண்ணை காதலிப்பதாக வைரமுத்து குடும்பத்தினரிடம் கூறியுள்ளார். ஏன் பெண் பார்ப்பதற்கு முன்னால் கூறவில்லை என பெற்றோர் அவரை கண்டித்தனர். இதனால் மனஉளைச்சலுக்கு உள்ளான வைரமுத்து, கடந்த இரண்டு நாட்களாக வேலைக்கு செல்லாமல் விடுமுறை எடுத்து சிவகாசிக்கு வந்துள்ளார். தனது வீட்டில் யாரிடமும் பேசாமல் இருந்து வந்துள்ளார். இதனிடையே சம்பவத்தன்று இரவு வைரமுத்து வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இந்த சம்பவம் குறித்து பாஸ்கரன் கொடுத்த புகாரின் பேரில் சிவகாசி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்