இன்ஸ்டாகிராம் மூலம் மலர்ந்த காதல்: கார் ஷோரூம் பெண் மேலாளரை ஏமாற்றி கர்ப்பமாக்கிய திருச்சி வாலிபருக்கு வலை…!
திருச்சியை சேர்ந்த 28 வயதுடைய பெண் ஒருவர், ஜங்ஷன் பகுதியில் உள்ள ஒரு கார் ஷோரூமில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு இன்ஸ்டாகிராம் வாயிலாக பால்பண்ணை விஸ்வாஷ் நகர் பகுதியைச் சேர்ந்த பொன்னையன் என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அந்த பழக்கம் காதலாக மாறியது. பின்னர் தனிமையில் சந்தித்து இருவரும் நெருங்கி பழகியதில் அந்த பெண் கர்ப்பமானார். இதனை தனது காதலனிடம் தெரிவித்த அந்த பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டுள்ளார். ஆனால், அவர் கர்ப்பமாக இருக்கும் போது திருமணம் செய்து கொண்டால் உறவினர்கள் கேவலமாக பேசுவார்கள். ஆகவே, கர்ப்பத்தை கலைத்து விட்டால் திருமணம் செய்து கொள்வதாக தெரிவித்துள்ளார். இதனை உண்மை என்று நம்பிய அந்தப் பெண் கர்ப்பத்தையும் கலைத்துள்ளார். அதன் பின்னரும் பொன்னையன் திருமணத்திற்கு ஒப்புக் கொள்ளவில்லை. இதனால், வாழ்க்கையில் விரக்தி அடைந்த அந்தப் பெண், விஷத்தை குடித்துவிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அப்போதும் காதலன் திருமணம் செய்து கொள்ளவில்லை. அவருடன் உள்ள உறவையும் பொன்னையும் துண்டித்துக் கொண்டதாக கூறப்படுகிறது. இதனால், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்த பெண், திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் காமினியை சந்தித்து புகார் மனு அளித்தார். கமிஷனர் உத்தரவின்பேரில் ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் பொன்னையன் மீது வழக்கு பதிவு செய்து அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.
Comments are closed.