Rock Fort Times
Online News

திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் லாட்டரி விற்பனை அமோகம்…

கலெக்டரிடம் பா.ம.கவினர் புகார்..

திருச்சி மாநகர் மாவட்ட பா.ம.க. செயலாளர் பி.கே.திலீப்குமார் தலைமையில் காந்தி மார்க்கெட் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் இன்று கலெக்டர் மா. பிரதீப்குமாா் ஐ.ஏ.எஸ்சை சந்தித்து ஒரு புகார் மனு அளித்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரிகள் அமோகமாக விற்பனை செய்யப்படுகிறது. இதுகுறித்து தங்களிடம் கடந்த மாதம் 26 ம் தேதி மனு அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் , அப்பாவி நபர்கள் 2 பேர் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளனர். விற்பனை செய்யக்கூடிய ஏஜென்ட் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகவே, காந்தி மார்க்கெட்டை சுற்றியுள்ள மீன் மார்க்கெட் , பழக்கடை, வாழைக்காய் மண்டி, தாராநல்லூர் ,வரகனேரி, தஞ்சை ரோடு, பால்பண்ணை ஆகிய பகுதிகளில் படுஜோராக லாட்டரி விற்பனையில் ஈடுபடும் ஏஜெண்டுகளை உடனடியாக கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. மனு அளித்தபோது மாவட்ட அமைப்புச் செயலாளர் எழிலரசன், ரபீக் பாய், ஹரிஹரன், முரளிதரன், கண்ணன், வடிவேல், முருகானந்தம், ஜெகதீஷ், ஐயப்பன், பிரகாஷ், பன்னீர், திருமலை, ஜெகன், ரியாஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்