Rock Fort Times
Online News

உயிர் குடிக்கும் திருச்சி,கொள்ளிடம்! ஆற்றில் மூழ்கி 9வயது சிறுமி பலி! பெற்றோருடன் குளிக்க வந்தபோது விபரீதம்!

திருச்சி, உறையூர், வாத்துக்கார தெருவை சேர்ந்தவர் கார்த்திகேயன் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால், மாலை 4 மணியளவில் தனது மனைவி சபூரா மற்றும் 3 குழந்தைகளுடன் திருச்சி திருவானைக்காவல் செக் போஸ்ட் கொள்ளிடம் ஆற்றில் குளிக்கச் சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக அவரது ஐந்து வயது மகள் சரோஜினி சன்மதி நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.  இது குறித்து தகவல் அறிந்த ஸ்ரீரங்கம் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்த சிறுமியின் உடலை மீட்டனர்.மேலும் சம்பவ இடத்திற்கு வந்த ஸ்ரீரங்கம் போலீசார் இறந்த உடலை கைப்பற்றி உடற்கூறாய்விற்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொள்ளிடம் ஆற்றில் நீரில் மூழ்கி இறக்கும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.  கடந்த இரண்டு மாதத்தில் மட்டும் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Error 403 The request cannot be completed because you have exceeded your quota. : quotaExceeded

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்