திமுக தலைமையிலான கூட்டணியில் திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் துரை வைகோ மற்றும் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கே.என். அருண் நேரு ஆகியோருக்கு வாக்கு கேட்டு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன் வருகிற ஏப்ரல் 2ம் தேதி இரு தொகுதிகளிலும் தேர்தல் பிரச்சாரம் செய்கிறார். அன்று மாலை 5 மணி அளவில் திருச்சி ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் அருகே துரை வைகோவை ஆதரித்தும், மாலை 6-30 மணி அளவில் பெரம்பலூர் தொகுதி வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்தும், இரவு 7-30 மணியளவில் துறையூர் பாலக்கரை பகுதியிலும் ஆதரவு திரட்டி பேசுகிறார். இதனை முன்னிட்டு ஸ்ரீரங்கம் பகுதிக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் திருச்சி கிழக்கு மாவட்ட செயலாளர் என்.சுரேஷ், பெரம்பலூர் சங்குப்பேட்டை பேட்டை பகுதிக்கு திருச்சி மண்டல அமைப்பாளர் மற்றும் நற்பணி அணியைச் சேர்ந்த எம். ரிபாய்தீன், துறையூர் பாலக்கரை பகுதிக்கு திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் வக்கீல் கிஷோர் குமாரும் ஒருங்கிணைப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.