Rock Fort Times
Online News

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம்: தமிழக ஆளுநருடன் அண்ணாமலை திடீர் சந்திப்பு…!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். கள்ளச்சாராயம் விற்பனையை தடுக்க தவறிய தி.மு.க., அரசை கண்டித்து, பா.ஜ.,வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்நிலையில் இன்று ( 24-06-2024) சென்னை கிண்டி கவர்னர் மாளிகையில் தமிழிசை சவுந்திரராஜன் உள்ளிட்ட பா.ஜ., மூத்த நிர்வாகிகளுடன், தமிழக ஆளுநரை பாஜக தலைவர் அண்ணாமலை சந்தித்தார். அப்போது கவர்னர் ஆர்.என்.ரவியிடம், கள்ளச்சாராயம் குடித்து 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அண்ணாலை வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. மேலும், திமுக அரசு கள்ளச்சாராயம் விற்பனையை தடுக்க நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என ஆளுநர் ரவியிடம் அண்ணாமலை புகார் மனு அளித்தார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்