ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு அதிமுகவினர் மலர்தூவி மரியாதை* திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளர் ஜெ.சீனிவாசன் தலைமையில் நிர்வாகிகள் பங்கேற்பு
அதிமுக முன்னாள் பொதுச்செயலாளர் மற்றும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77 -ம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி நீதிமன்றம் அருகில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கும், அலங்கரிக்கப்பட்ட ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கும் மாநகர் மாவட்ட செயலாளர் ஜெ.சீனிவாசன் தலைமையில் இன்று (24-02-2025) நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இந்த நிகழ்ச்சியில் அமைப்பு செயலாளர் ரத்தினவேல், ஜெயலலிதா பேரவை மாநில துணை செயலாளர்கள் அரவிந்தன், ஜோதிவாணன், மாவட்ட துணை செயலாளர் வனிதா பத்மநாதன், ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் இன்ஜினியர் கார்த்திகேயன், ஜெயலலிதா பேரவை மாவட்ட துணை செயலாளர் சிந்தாமணி முத்துக்குமார், மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற இணைச் செயலாளர் இன்ஜினியர் இப்ராம்ஷா, மாவட்ட இளைஞரணி செயலாளர் ரஜினிகாந்த், மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் எம்.பொன்னர், பகுதி செயலாளர்கள் புத்தூர் ராஜேந்திரன், கலீல் ரகுமான், வாசுதேவன், அன்பழகன், என்.எஸ்.பூபதி, எம்.ஆர்.ஆர்.முஸ்தபா, நாகநாதர் பாண்டி, ஏர்போர்ட் விஜி ரோஜர், கலைவாணன், மாநகராட்சி அதிமுக தலைவர் கோ.கு. அம்பிகாபதி, இலக்கிய அணி மாவட்ட செயலாளர் பாலாஜி, மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் சில்வர் சதீஷ்குமார், கலைப்பிரிவு பொருளாளர் உறையூர் சாதிக் அலி, ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர்கள் எனர்ஜி அப்துல் ரகுமான், என்ஜினியர் ரமேஷ், கருமண்டபம் சுரேந்தர், சிறுபான்மை பிரிவு தென்னூர் ஷாஜகான், வக்கீல் அணி நிர்வாகிகள் முல்லை சுரேஷ், முத்துமாரி, சசிகுமார்,கங்கை செல்வன், கங்கை மணி,முன்னாள் கோட்டத் தலைவர் ஞானசேகர், அதிமுக நிர்வாகிகள் காசிபாளையம் சுரேஷ்குமார், கே.டி.ஏ. அன்புரோஸ், எடத்தெரு பாபு, அப்பாகுட்டி, உடையான்பட்டி செல்வம், கே.டி.ஏ. ஆனந்தராஜ், வசந்தம் செல்வமணி, எ.புதூர் வசந்தகுமார், ஜெயகுமார், ஆரி, செபா, ரமணிலால், உறந்தை மணிமொழியன், அக்பர் அலி, கீழக்கரை முஸ்தபா, பாலக்கரை ரவீந்திரன், வாழைக்காய் மண்டி சுரேஷ் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள், அணி நிர்வாகிகள், வட்ட செயலாளர்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக திருச்சி மாநகருக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் பல்வேறு அணிகள் மற்றும் நிர்வாகிகள் சார்பில் நடைபெற்ற அன்னதானம், கொடி ஏற்றுதல் நிகழ்ச்சி, இலவச தேநீர் வழங்குதல் நிகழ்ச்சியை மாநகர் மாவட்ட செயலாளர் ஜெ.சீனிவாசன் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வுகளில் திரளான நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
Comments are closed.