Rock Fort Times
Online News

திருச்சியில் நீதிபதிகள், வக்கீல்கள் பங்கேற்ற சமரச தின விழிப்புணர்வு பேரணி…!

சென்னை உயர்நீதிமன்றத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு மாநில சமரச தீர்வு மையத்தின் உத்தரவின்பேரில் திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில்  19-வது ஆண்டு சமரச தின நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி கே.பாபு தலைமை தாங்கி பேசினார். பின்னர், சமரச தீர்வு மையம் சார்பில்  சமரச தின விழிப்புணர்வு பேரணி நடந்தது. பேரணியை திருச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான பாபு கொடியசைத்து  தொடங்கி வைத்தார். பேரணியில் மாவட்ட நீதிபதிகள், சார்பு நீதிபதிகள், மாவட்ட உரிமையியல் நீதிபதிகள், குற்றவியல் நீதித்துறை நடுவர்கள். அரசு  வழக்கறிஞர்கள், சட்ட உதவி எதிர்தரப்பு வழக்கறிஞர்கள், சட்டக்கல்லூரி பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள், கோர்ட் பணியாளர்கள், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள், சட்ட தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.  பேரணிக்கான ஏற்பாடுகளை திருச்சி மாவட்ட சமரச தீர்வு மையத்தின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் சார்பு நீதிபதி நசீர்அலி செய்திருந்தார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்