Rock Fort Times
Online News

திருச்சி, திருவெறும்பூரில் தலை துண்டித்து ரவுடி கொலை செய்யப்பட்ட வழக்கில் போலீசில் வாலிபர் சரண்…!

திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள  பனையகுறிச்சியை  சேர்ந்தவர் சுந்தர்ராஜ் (35). ரவுடியாக வலம் வந்த இவர், அந்த பகுதியில் உள்ள பரிமளா என்ற  பெண்ணுடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படுகிறது.  இது, அந்தப் பெண்ணின் அண்ணன் கணேச மூர்த்திக்கு கௌரவ பிரச்சினையாக இருந்தது. இந்தநிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பரிமளாவை பொது இடத்தில் வைத்து சுந்தர்ராஜ் தாக்கியுள்ளார்.  இதனால், மேலும் ஆத்திரமடைந்த  கணேசமூர்த்தி மற்றும் அவரது மகன்கள் உள்ளிட்ட நான்கு பேர் சேர்ந்து  செப்டம்பர்  12ம் தேதி இரவு சித்தப்பா வீட்டு மொட்டை மாடியில் தூங்கிக் கொண்டிருந்த சுந்தர்ராஜை கழுத்தை துண்டித்து கொலை செய்தனர். இச்சம்பவம் குறித்து திருவெறும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து கணேசமூர்த்தி, வடிவேல் மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய மூன்று பேரை கைது செய்தனர்.  இந்தக் கொலை வழக்கில் மாரிமுத்து என்பவர் தலைமறைவாக இருந்தார்.  இந்நிலையில் திருவெறும்பூர் காவல் நிலையத்தில் மாரிமுத்து சரணடைந்தார். அவரை போலீசார் கைது செய்து திருச்சி ஆறாவது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

Error 403 The request cannot be completed because you have exceeded your quota. : quotaExceeded

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்