Rock Fort Times
Online News

மீண்டும் பள்ளத்தில் சிக்கிய அரசுப் பேருந்து….

கடந்த மாதம் 5 ந்தேதி திருச்சியில் இருந்து லால்குடி, அரியலூர் வழியாக ஜெயங்கொண்டம் செல்லும் அரசு பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றி சென்று கொண்டிருந்தது. பேருந்து முழுவதும் பயணிகள் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் லால்குடி ரவுண்டானா பகுதியில் சென்று கொண்டிருந்தபோது பெரம்பலூர் கொள்ளிடம் கூட்டு குடிநீர் செல்ல தோண்டப்பட்ட பள்ளத்தில் எதிர்பாராத விதமாக பேருந்து பக்கவாட்டு சக்கரங்கள் மண்ணில் பதிந்து பேருந்து சாய்ந்தபடி நின்றது . இதில் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் அதிர்ஷ்டவசமாக காயமின்றி பயணிகள் அனைவரும் உயிர்  தப்பினர். இது குறித்து தகவல் அறிந்த லால்குடி போலீசார் , அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளார்கள் போக்குவரத்து பாதிப்பு ஏற்படாமல் சாலையை சீர் செய்தனர். மேலும் கிரேன் எந்திரத்தின் உதவியுடன் அரசு பேருந்தை மீட்டனர். மேலும் கடந்த ஒரு மாதமாக குடிநீர் குழாய்க்காக தோண்டப்பட்ட பள்ளம் உள்ள வழியாக வாகனங்கள் செல்லாமல் மாற்றுப் பாதையில் இயங்கி வந்தது. இந்நிலையில் இன்று அரசுப் பேருந்து ஒன்று குழி தோண்டப்பட்ட பகுதி வழியாக சென்ற போது மீண்டும் அதே பள்ளத்தில் பேருந்து சிக்கிக் கொண்டது. இதனை தொடர்ந்து கிரேன் மூலம் பொதுமக்கள் உதவியுடன் போலீசார் பள்ளத்தில் சிக்கிய பேருந்தை மீட்டனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்