திருச்சி மக்களுக்கு இனிப்பான செய்தி சென்னை, மதுரை, கோவைக்கு 15 புதிய பஸ்கள்
அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தனர்...!
தமிழகத்தின் மையப் பகுதியாக திருச்சி விளங்கி வருகிறது. இங்கிருந்து நாள் ஒன்றுக்கு சராசரியாக 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் சென்னை, மதுரை, கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட முக்கிய ஊர்களுக்கு பயணம் செய்து வருகின்றனர். சில நேரங்களில் அவர்களுக்கு போதிய பஸ் வசதி கிடைப்பதில்லை.
இதனை கருத்தில் கொண்டு திருச்சி மாவட்டத்திற்கு 90 புதிய பேருந்துகள் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டிருந்தார். அதன்படி திருச்சியில் இருந்து சென்னை, கோயம்புத்தூர் , மதுரை, ராமநாதபுரம், கரூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு 15 புதிய பி.எஸ். -6 ரக பேருந்துகள் துவக்க விழா இன்று(20-07-2024) நடைபெற்றது. இவ்விழாவில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்து கொண்டு 15 புதிய பேருந்துகளை கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
இதில், மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார், மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், மாநகராட்சி ஆணையர் சரவணன், கோட்ட மேலாண் இயக்குநர் மகேந்திரகுமார், மத்திய மாவட்ட திமுக செயலாளர் வைரமணி, கிழக்கு மாநகர செயலாளரும், மண்டல குழு தலைவருமான மு.மதிவாணன், மண்டல குழு தலைவர்கள் விஜயலட்சுமி கண்ணன், துர்கா தேவி, பகுதிச் செயலாளர் மோகன்தாஸ், கவுன்சிலர்கள் காஜாமலை விஜய், கலைச்செல்வி, புஷ்பராஜ், மஞ்சுளா, பாலசுப்பிரமணியன், விஜயா ஜெயராஜ், ராமதாஸ், திமுக மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் கிராப்பட்டி செல்வம், புத்தூர் தர்மராஜ், முன்னாள் பகுதி செயலாளர் தில்லைநகர் கண்ணன், வட்ட செயலாளர்கள் புத்தூர் பவுல்ராஜ், மார்சிங்பேட்டை செல்வம், அரசு போக்குவரத்துக் கழக திருச்சி மண்டல பொது மேலாளர் முத்துகிருஷ்ணன், பொது மேலாளர் சிவசங்கரன்(கரூர்) உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Comments are closed.