இறக்கும் முன் உடல் உறுப்பு தானம் செய்வோரின் இறுதிச்சடங்குகள் அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் அறிவித்திருந்தார். இந்தநிலையில் தேனி மாவட்டம் சின்னமனூரைச் சேர்ந்த அரசு ஊழியர் வடிவேலு (வயது 37) என்பவர் சாலை விபத்து ஒன்றில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு அவர் , மூளைச் சாவு அடைந்தார். அவரது உடல் உறுப்புகளை தானம் அளிக்க அவரது குடும்பத்தினர் முன் வந்தனர். அதன்படி, அறுவை சிகிச்சை மூலம் அவரது உடல் உறுப்புகள் அகற்றப்பட்டு தானமாக அளிக்கப்பட்டன. இது குறித்து தகவல் அறிந்த தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சின்னமனூர் வந்து வடிவேலு இறுதிச்சடங்கில் பங்கேற்றார்.
முன்னதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறுகையில், இறக்கும் தருவாயில் உள்ளவர்கள் தங்களது உறுப்புகளை தானமாக அளிக்க முன் வந்தால் அவர்களின் இறுதிச் சடங்குகள் அரசு சார்பில் நடத்தப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதன்படி, மூளைச்சாவு அடைந்த வடிவேலுவின் உறுப்புகள் தானமாக பெறப்பட்டுள்ளது. வடிவேலு இறுதி சடங்கில் பங்கேற்பதற்காக தேனி செல்கிறேன் என்று கூறினார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.