நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி துவங்கி ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தேர்தல் பணிகளில் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் உட்பட அரசு ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இந்நிலையில் 12 மற்றும் 11ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது பத்தாம் வகுப்பு தேர்வுகள் நடைபெற்று வருகிறது. ஏப்ரல் 8ம் தேதியுடன் இந்த தேர்வுகளும் நிறைவடைய உள்ளது. இதனிடையே 4 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகள் இந்த மாதம் நடைபெற உள்ளது. 23ம் தேதியுடன் இந்த தேர்வுகள் முடிவடைய உள்ளது. இதனிடையே தேர்தல் பணிகளில் ஈடுபட உள்ள அரசுப் பள்ளி ஆசிரியர்களின் வசதிக்காக வருகிற ஏப்ரல் 15-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேதிகளில் மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக 4 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் தேர்வுகளுக்காக
22 மற்றும் 23ம் தேதிகளில் மட்டும் பள்ளிகளுக்கு வருகை தந்தால் போதுமானது என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
Error 403 The request cannot be completed because you have exceeded your quota. : quotaExceeded
Comments are closed, but trackbacks and pingbacks are open.