Rock Fort Times
Online News

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக  பல லட்சம் ரூபாய் மோசடி..

3 பேர் மீது வழக்கு.

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை கீழத் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் அருள் மாணிக்கராஜ் (வயது 39). இவரிடம் திருச்சி எடமலைப்பட்டிபுதூரை சேர்ந்த ஷாஜகான் அறிமுகமானார். அப்போது ஷாஜகான் அவரிடம், உங்களுக்கு வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி முதல் கட்டமாக ரூ.75 ஆயிரம் பெற்றுள்ளார். தொடர்ந்து அடுத்தடுத்து பல கட்டங்களாக பல லட்சம் பெற்றதாக கூறப்படுகிறது. மேலும், அருள் மாணிக்கராஜின் நண்பர்களான ரஞ்சித்குமார், அருள்ஜோரன், குமார் ஆகியோரும் வெளிநாட்டில் வேலை வாங்கி தர கூறி ஷாஜகானிடம் லட்சக்கணக்கில் பணம் கொடுத்தனர். ஆனால் அவர்களுக்கு ஷாஜகான் வெளிநாட்டில் வேலை வாங்கி கொடுக்கவில்லை. பணத்தையும் திருப்பிக் கொடுக்கவில்லை. இதுகுறித்து திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் எம். சத்திய பிரியா ஐஏஎஸ்சிடம் அருள் மாணிக்கராஜ் புகார் கொடுத்தார். இதே போல திருச்சி எடமலைப்பட்டிபுதூர் பாப்பா காலனியை சேர்ந்த பாலு ( 47) மற்றும் அவரது நண்பர்கள் 8 பேர் இணைந்து திருவாரூர் மாவட்டம் தில்லைவிளாகம் தெற்கு காடு கிராமத்தை சேர்ந்த வேலரசன், வைரவேல் ஆகியோரிடம் கனடாவில் வேலை வாங்கித் தரக்கோரி ரூ.12 லட்சம் கொடுத்தனர் . ஆனால், அவர்களுக்கு வெளிநாட்டில் வேலை வாங்கி கொடுக்கவில்லை. இது தொடர்பாக திருச்சி மாநகர போலீஸ் கமிஷனரிடம் பாலு புகார் கொடுத்தார். மேற்கண்ட புகார்களின் மீது நடவடிக்கை எடுக்க கமிஷனர் உத்தரவிட்டார். அதன் பேரில் எடமலைப்பட்டி புதூர் போலீசார், ஷாஜகான் மற்றும் வேலரசன், வைரவேல் ஆகிய 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். –

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்