திருச்சி விமான நிலையத்திலிருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் இலங்கை தலைநகர் கொழும்புவிற்கு செல்லவிருந்த பயணிகள் மற்றும் அவர்களது உடைமைகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ஒரு பயணியிடம் பல்வேறு வெளிநாடுகளை சேர்ந்த கரன்சிகள் அதிக அளவில் இருந்தது. அவற்றைக் கொண்டு செல்வதற்கான ஆவணங்கள் எதுவும் அவரிடம் இல்லாததால் அந்த கரன்சிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அவற்றின் இந்திய மதிப்பு ரூ.4 லட்சம் இருக்கும் என அதிகாரி ஒருவர் மதிப்பிட்டார். அந்தப் பயணியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Comments are closed.